"கலைஞர் சுவதம்" வேலைத் திட்டத்தின் கீழ் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் "கலைஞர் சுவதம்" திட்டத்தின் கீழ், மூத்த கலைஞர்களைக் கௌரவித்து உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (22) புதன்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் திறமையான கலைஞர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களைச் சந்தித்து கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இம்முறை கெளரவிப்பதற்காக பெயரிடப்பட்ட நால்வரில் முதற்கட்டமாக வாழைச்சேனை-04, வை.எம்.எம்.ஏ.குறுக்கு வீதியில் வசிக்கும் ஏ.எச்.ஹுஸைன், மற்றும் வாழைச்சேனை-04, கொமைனி வீதியில் வசித்துவரும் யூ.அஹமட் (அதிபர்) ஆகியோரும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

News & Events

18
ஆக2026
கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்...

18
ஆக2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top