சமுர்த்தி திணைக்களத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிறைந்துறைச்சேனை மற்றும் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவுகளில் "ரன்விமன" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.10 இலட்சம் நிதியுதவியில் 2 புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன. சமுர்த்தி கொடி தினம் – 2023 நிதி மூலம் 12 வறிய குடும்ப மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், 14 பாடசாலைகளுக்கு மொத்தம் 42 குப்பைத் தொட்டிகளும் வழங்கப்பட்டன. சமுர்த்தி வங்கி மூலம் "ரன்பத" மற்றும் "சவிபல" கடன் திட்டங்களின் கீழ் தலா 2 பயனாளிகளுக்கு கடனுதவிகளும், பொருளாதார வசதி குறைந்த 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.ஏ.சி. நியாஸ்தீன் ஹாஜியார், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். சமீம், மாவட்ட செயலக தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீர், பிரதேச செயலக தலைமை முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல். சரீப், வங்கி முகாமையாளர் எஸ். ரவிச்சந்திரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஐயூப்கான், பிரஜாசக்தி தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News & Events

18
අගෝ2026
கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்...

18
අගෝ2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு...

Scroll To Top