வெசாக் வாரத்தை முன்னிட்டு சிறி மஹிந்தாராம் விகாரையில் சிரமதானப் பணி | 02 ஜூன் 2026
வெசாக் வாரத்தை முன்னிட்டு சிறி மஹிந்தாராம் விகாரையில் சிரமதானப் பணி | 02 ஜூன் 2026வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் முன்னெடுப்பில், வெசாக் வாரத்தை முன்னிட்டு தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலங்கரச்சை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறி மஹிந்தாராம் விகாரை வளாகத்தில் சிரமதானப் பணி 02 ஜூன் 2026 அன்று நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், கோறளைப்பற்று மத்தி பிரிவிற்கான Clean Sri Lanka இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். சமீம், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஏ.சி. நியாஸ்தீன், தியாவட்டவான் 210C பிரஜாசக்தி தலைவர் எம்.பி. பெளருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் சிரமதானப் பணியில் பங்கேற்றனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "பொதுத்தூய்மை குப்பைக் கூளம் அகற்றல்" தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது. பொதுமக்கள், மதஸ்தலங்கள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. "சுத்தமான சூழல் – ஆரோக்கியமான வாழ்க்கை" என்ற இலக்கை அடைவதற்காக அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.













