உலக சுற்றாடல் தின நிகழ்வு|05.06.2026
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, வாழைச்சேனையில் அமைந்துள்ள ஏ.எச். பாலர் பாடசாலையில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி ஜுமானா ஹஸீன் அவர்களின் தலைமையில் 2026.06.05 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சர்ஜூன், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அஸ்ரப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. தாசிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு. நிஸாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சிறுவர்களிடையே சுற்றாடல் தொடர்பான பொறுப்புணர்வை வளர்ப்பதும் இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது.













