உலக சுற்றாடல் தின நிகழ்வு|05.06.2026 

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, வாழைச்சேனையில் அமைந்துள்ள ஏ.எச். பாலர் பாடசாலையில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி ஜுமானா ஹஸீன் அவர்களின் தலைமையில் 2026.06.05 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சர்ஜூன், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அஸ்ரப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. தாசிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு. நிஸாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சிறுவர்களிடையே சுற்றாடல் தொடர்பான பொறுப்புணர்வை வளர்ப்பதும் இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது.

News & Events

18
Aug2026
கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்...

18
Aug2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு...

Scroll To Top